Saturday 17 November 2012

என் குழந்தை



எதிர்காலத்திற்காக
நிகழ்காலத்தைத் தொலைத்தவர்களென
என் பெற்றோரை
எண்ணும் வேளையில்,
என் மடியில்
அர்த்தத்துடன் சிரித்தபடி
என் குழந்தை .....

Thursday 15 November 2012

ஊஞ்சல்






ஆட்டிவிட 
ஆளில்லாத 
பூங்காவின் ஊஞ்சல் பொழுதுகள் 
தெளிவாய் உணர்த்தும் 
தனிமையின் வலியை ....

Wednesday 7 November 2012

முதுமை

 
நரைக்கத் தொடங்கும்
என் தாய் தந்தையின் முடிகளும்
என் எதிர்காலத்திற்கான
அவர்களின் கவலைகளும்
எனக்கு உணர்த்துகிறது,
காலங்கள் ஓடுவதை......
முதுமையை உணரத் தொடங்குவது,
அவர்கள் மட்டுமல்ல நானும் தான்...........