இன்று புதிதாய்......
வாழ்க்கைத் துளியில் சில, வார்த்தை வடிவில்...
Saturday 17 November 2012
என் குழந்தை
எதிர்காலத்திற்காக
நிகழ்காலத்தைத் தொலைத்தவர்களென
என் பெற்றோரை
எண்ணும் வேளையில்,
என் மடியில்
அர்த்தத்துடன் சிரித்தபடி
என் குழந்தை .....
Thursday 15 November 2012
ஊஞ்சல்
ஆட்டிவிட
ஆளில்லாத
பூங்காவின் ஊஞ்சல் பொழுதுகள்
தெளிவாய் உணர்த்தும்
தனிமையின் வலியை .
...
Wednesday 7 November 2012
முதுமை
நரைக்கத் தொடங்கும்
என் தாய் தந்தையின் முடிகளும்
என் எதிர்காலத்திற்கான
அவர்களின் கவலைகளும்
எனக்கு உணர்த்துகிறது,
காலங்கள் ஓடுவதை......
முதுமையை உணரத் தொடங்குவது,
அவர்கள் மட்டுமல்ல நானும் தான்...........
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)