இரயிலின்
ஜன்னல் பசுமை வழி
பயணிக்கிறது
பிறந்த ஊரும்
இளமையின் பசுமைகளும்....
விடியாத இந்த இரவு
விடியாமலே நீளட்டும்....
விடிந்தால் வாழ வேண்டும்
மீண்டும் ஒரு முறை....
பகிராத மகிழ்ச்சியும்
ஏற்படுத்தவே செய்கிறது
சில
ஆறாத காயங்களை....
மங்கியப் புகைப்படத்தில்
மிச்சமிருக்கிறது
மறந்து போன
பள்ளிச் சுற்றுலா.....